Sunday, December 5, 2010
Saturday, December 4, 2010
நினைவுகளே தொலைந்துவிடு
*********
பனித்துளிகளாய் குளிர்ந்த உன் நினைவுகள் இப்பொழுது
நெருப்பு இல்லாமலே எரிந்துகொண்டு....
மொட்டுகளாய் மலர்ந்த கனவுகள் இப்பொழுது முட்களாய்
தினம் குத்திக்கொண்டு....
உன் நினைவுகளும் தொலைந்து போ...!
என் கனவுகளும் தொலைந்து போ....!
பனித்துளிகளாய் குளிர்ந்த உன் நினைவுகள் இப்பொழுது
நெருப்பு இல்லாமலே எரிந்துகொண்டு....
*********
மொட்டுகளாய் மலர்ந்த கனவுகள் இப்பொழுது முட்களாய்
தினம் குத்திக்கொண்டு....
**********
உன் நினைவுகளும் தொலைந்து போ...!
என் கனவுகளும் தொலைந்து போ....!
- நிலவு
Tuesday, November 30, 2010
Wednesday, November 17, 2010
அன்புக்காக
நீ ....நினைப்பது
நம் அன்பை துண்டிக்க
நான்.... நினைப்பது
நம் அன்பை தொடர.....
உன் அன்பு
பொய்யானதோ மெய்யானதோ...
பாவம் அறியாது கபடமற்ற என் நெஞ்சம்....
உயிள்ளவரை ஏங்கிகொடிருக்கிறது
உன் அன்பிற்காக...
.
அன்புடன்,,,,,
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Sunday, November 7, 2010
இடைவெளி
உன்னை மறந்து நீயும்
என்னை மறந்து நானும்
பேசிக்கொண்டு இருக்கையில்...
நம் நட்பிற்குள் உள்ள
ஒரு சிறு இடைவெளியை
நம்மை அறியாமல் நிரப்பிக்கொண்டு இருக்கையில்
திடீர் என்றொரு மின்னல் கீற்று.....
மீண்டும் ஒரு இடைவெளி
மீண்டும் மௌனம்...........
இந்த இடைவெளிக்கும் மௌனதிட்கும்
பெயர் தான் என்ன ?
விடை தெரியாமல் நாம்.....!
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Wednesday, October 20, 2010
உடைந்தது இதயம்
என்னை வெறுப்பது உன் குற்றமா ...?
நான் உன்னை வெறுப்பது என் குற்றமா ..?
இருப்பினும்.......
உனக்காக வாங்கி வந்த பரிசை
மட்டுமல்ல என் இதயத்தையும் அன்போடு
உன்னிடம் கொடுத்தேன்......
தூக்கி எறிந்துவிட்டாய் ....!
ஹம்ம்........!
தூக்கி எரிந்தது என் பரிசை மட்டுமல்ல
என் இதயத்தையும் கூட
சுக்கு நூறாக என் இதயம்
- நிலவு Saturday, September 4, 2010
நீ அறிவாயா?
உறவுகள் இல்லை
என்று ஏங்கி தவித்தாய்
உறவாக நான் உனக்கும்
உயிராக நீ எனக்கும்.....
என்று.....
*****
உனக்கு நான் ஆறுதலாக
எனக்கு நீ ஆறுதலாக
******
இன்று உறவுகளோடு நீ.....!
******
நான் மட்டும் தனிமயரையில்
உன் நினைவுகளோடும்
கண்களில் கண்ணீரோடும்
******
பாவாம் நீ...
என் கன்னத்தில் வழியும் கண்ணீருக்கு
கூட அர்த்தம் புரியாமல்...
ஆனந்த கண்ணீரா ,வேதனை கண்ணீரா என்று...!
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Wednesday, September 1, 2010
உன் குரல்.
அத்துனை மலர்களின்
நறுமணங்களையும்
ஒன்றாய் பூசி விடும்
தென்றல் காற்றாய்
உன் குரல்.....
என்ன வசியம்
வைத்துள்ளாய்
வார்த்தைகளில்
அனைத்தும்மறந்து
உன் குரல் கேட்க
பித்து பிடித்தாற்ப்போல்
மனம்..
உன் குரல் கேட்காத
அழகான அதிகாலை
கூட இன்று
அலங்கோலமாய்....
முடியவில்லை
உனை அழைக்கமுயன்றாலும்
முடியா எட்டாதூரத்தில்
என்னை மறந்துஎன்ன
செய்துக்கொண்டிருப்பாய்
நீ....ம்ம் என்று ஒரு
வார்த்தை மொழிந்துவிடு
இந்த நாள் இனியநாள்
எனக்கு...
சிநேகிதி
Labels:
ரசித்த கவிதைகள்
Tuesday, August 31, 2010
நட்பு பாதை
தடு மாறும் போது
தாங்கி பிடித்தாய்....
தடம் மாறும் போது
தட்டிக் கேட்டாய்....
*********
உனக்கு துணையாக நான்.....
எனக்குதுனையாக நீ......
நம் நட்பு பாதையில் தடைகள் இன்றி
தொடர்ந்தோம் மகிழ்ந்தோம்
*********
இன்று நீயே....
பாதியில் தடங்கல் மாறி
பாதைகளையும் மாற்றி
நீ எங்கோ நான் எங்கோ....
**********
நீ பிரிந்தாலும் உன் நட்பின் நினைவுகள்
என்றும் என்னுடன்.....!
*********
நட்புடன்...
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Wednesday, August 25, 2010
Monday, August 23, 2010
Sunday, August 22, 2010
அன்புத் தோழன்
என் மனதின் காயங்கள்...
இன்பங்கள் ,துன்பங்கள் ...
தேவைகள், ஆசைகள்...
கனவுகள்...
எல்லாம் தெரிந்து
அறிந்து, புரிந்து
பகிர்ந்துகொள்ள
காயப்பட்ட மனதுக்கு ஆறுதலாக, மருந்தாக
நீ வந்தாய் எனக்கே எனக்காக
ஒரு அன்பு தோழனாய்
இன்று உன் மௌனத்தால்
என் மனதிற்கு மேலும் காயங்களை
கொடுக்காதே...!
தாங்கிக்கொள்ள சக்தியில்லை
என் இதயத்திற்கு..
புரிந்துகொள்.. !
- நிலவு
.
இன்பங்கள் ,துன்பங்கள் ...
தேவைகள், ஆசைகள்...
கனவுகள்...
எல்லாம் தெரிந்து
அறிந்து, புரிந்து
பகிர்ந்துகொள்ள
காயப்பட்ட மனதுக்கு ஆறுதலாக, மருந்தாக
நீ வந்தாய் எனக்கே எனக்காக
ஒரு அன்பு தோழனாய்
இன்று உன் மௌனத்தால்
என் மனதிற்கு மேலும் காயங்களை
கொடுக்காதே...!
தாங்கிக்கொள்ள சக்தியில்லை
என் இதயத்திற்கு..
புரிந்துகொள்.. !
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
இறந்துகொண்டு இருக்கிறேன்
உன் கடும் வார்த்தைகளால்
என்னை கொள்வதை விட
மௌனமாகவே இருந்துவிடு!
உன் மௌனத்தையேனும் ரசிக்கிறேன்
உன் கடும் பார்வைகளால் பார்த்து
என்னை கொள்வதை விட
நீ பார்க்காமலே இருந்துவிடு!
நானாவது உன்னை பார்த்து ரசிக்கிறேன்
நீ உன் வார்த்தைகளாலும், பார்வைகளாலும்
என் இதயத்தை கொன்றுவிட்டாய்!
இன்று உன் மௌனத்தால்
நான் தினம் இறந்துகொண்டிருக்கிறேன்!
- நிலவு
.
என்னை கொள்வதை விட
மௌனமாகவே இருந்துவிடு!
உன் மௌனத்தையேனும் ரசிக்கிறேன்
உன் கடும் பார்வைகளால் பார்த்து
என்னை கொள்வதை விட
நீ பார்க்காமலே இருந்துவிடு!
நானாவது உன்னை பார்த்து ரசிக்கிறேன்
நீ உன் வார்த்தைகளாலும், பார்வைகளாலும்
என் இதயத்தை கொன்றுவிட்டாய்!
இன்று உன் மௌனத்தால்
நான் தினம் இறந்துகொண்டிருக்கிறேன்!
- நிலவு
.
Labels:
நிலாவின் கவிதைகள்
உன் முடிவில் என் ஆரம்பம்...
அன்று நீ எனக்காய் ஆரம்பித்த வரிகளில்
ஏனோ வைத்தாய் முற்றுப்புள்ளி?
இன்றுவரை புரியவில்லை
நீ வைத்த புள்ளியில் இருந்து
ஆரம்பித்த வரிகளாய் முடிக்க முடியாமல்
தொடர்கிறேன்...
உனக்காய்....
முடிப்பது எப்படி என்று புரியவில்லை
- நிலவு
.
ஏனோ வைத்தாய் முற்றுப்புள்ளி?
இன்றுவரை புரியவில்லை
நீ வைத்த புள்ளியில் இருந்து
ஆரம்பித்த வரிகளாய் முடிக்க முடியாமல்
தொடர்கிறேன்...
உனக்காய்....
முடிப்பது எப்படி என்று புரியவில்லை
- நிலவு
.
Labels:
நிலாவின் கவிதைகள்
கருவறைச் சுகம்
அன்னையே!
உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை பயமுறுத்துகிறது
◙
உன் உதிரத்தில் நானிருந்தேன்
உணர்ந்தது பூ வாசம் - இன்று
உலகத்தில் நானிருக்க
உணர்வதெல்லாம் பிண வாசம்
◙
நிசப்தத்தின் மத்தியிலே
என்னை தாலாட்டியது
உன் நாடித்துடிப்பு- இன்று
சப்தங்களால்...
நிசப்தமாக பார்கிறது
என் இதயத்துடிப்பு
◙
மொழிகளெல்லாம் அங்கிருக்கவில்லை
என் அசைவு மொழிகளுக்கு
பக்குவமாய் நீ
பதில் சொன்னாய்
மொழிகளால் தான்
இங்கு சிலபேர்
எலிகளாய்...
ஒழிய வேண்டி இருக்கிறது
◙
என் உலகம்
மூடி தான் இருந்தாலும்
மூச்சுக்காற்றுக்காய்
தவமிருக்கவில்லை
நான் அன்று
அந்தமின்றி விரிந்தாலும்
என் உலகம்- சிலவேளை
மூச்சுவிடக் காற்றின்றி
மூர்ச்சையாகி போகின்றேன் இன்று
◙
அன்னையே!
உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை பயமுறுத்துகிறது
-ஜாவிட் ரயிஸ்
.
உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை பயமுறுத்துகிறது
◙
உன் உதிரத்தில் நானிருந்தேன்
உணர்ந்தது பூ வாசம் - இன்று
உலகத்தில் நானிருக்க
உணர்வதெல்லாம் பிண வாசம்
◙
நிசப்தத்தின் மத்தியிலே
என்னை தாலாட்டியது
உன் நாடித்துடிப்பு- இன்று
சப்தங்களால்...
நிசப்தமாக பார்கிறது
என் இதயத்துடிப்பு
◙
மொழிகளெல்லாம் அங்கிருக்கவில்லை
என் அசைவு மொழிகளுக்கு
பக்குவமாய் நீ
பதில் சொன்னாய்
மொழிகளால் தான்
இங்கு சிலபேர்
எலிகளாய்...
ஒழிய வேண்டி இருக்கிறது
◙
என் உலகம்
மூடி தான் இருந்தாலும்
மூச்சுக்காற்றுக்காய்
தவமிருக்கவில்லை
நான் அன்று
அந்தமின்றி விரிந்தாலும்
என் உலகம்- சிலவேளை
மூச்சுவிடக் காற்றின்றி
மூர்ச்சையாகி போகின்றேன் இன்று
◙
அன்னையே!
உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை பயமுறுத்துகிறது
-ஜாவிட் ரயிஸ்
.
Labels:
ரசித்த கவிதைகள்
விதி வைத்த முற்றுப்புள்ளி
மகளே!
மூச்சுக் காற்று மட்டும்
உரிமை கோரும்
ஏகாந்தமான இரவொன்றில்
உன் நினைவுகளை
கொஞ்சம் அசை போடுகிறேன்...
தாயின் கருவறைக்கு
அர்த்தம் கொடுத்தவளே!
தந்தை என் மனதில்
பூவாய் பூத்தவளே!
உறக்கம் இன்றிய இரவுகளில்
உன் அழுகை எனக்கு தாலாட்டு
ஆபீஸ் களைப்பில் வரும் எனக்கு
உன் அழுகை தானே வாடைக்காற்று
தென்றல் என்னை தீண்டியதாய்...
சாரல் என்னை சீண்டியதாய்...
எனக்குள் ஒரு கிளுகிளுப்பு
உன் பிஞ்சு விரல்களை தாங்கையில்
நிலவை கையில் ஏந்தியதாய்...
பூக்களே என்னை தாங்குவதாய்
எனக்குள் ஒரு பூரிப்பு...
என் மடியில் உன் தலை சாயுகையில்
பாவாய் நீயும்
பாவை ஏந்தி
விளையாடும் ஒரு கணத்தில்
பூவாய் மாறி
உன் தாய் நெஞ்சும்
அமிர்தம் சுமப்பது அறிவாயோ?
ஆயிரம் நாட்கள் காத்திருந்து
ஆறுதலாக பிறந்தவளே!
ஆறு வருடம் கூட உன் ஆயுள்
இறைவன் விதியில் நிலைக்கலையே?
தாங்கிய காம்புகள் தனித்திருக்கிறது
கனவிலாவது நீ வருவாய்
ஆயுள் முழுக்க உன் நினைவிருக்க
மாறி மாறி முத்தமிடுவாய்
-ஜாவிட் ரயிஸ்
.
மூச்சுக் காற்று மட்டும்
உரிமை கோரும்
ஏகாந்தமான இரவொன்றில்
உன் நினைவுகளை
கொஞ்சம் அசை போடுகிறேன்...
தாயின் கருவறைக்கு
அர்த்தம் கொடுத்தவளே!
தந்தை என் மனதில்
பூவாய் பூத்தவளே!
உறக்கம் இன்றிய இரவுகளில்
உன் அழுகை எனக்கு தாலாட்டு
ஆபீஸ் களைப்பில் வரும் எனக்கு
உன் அழுகை தானே வாடைக்காற்று
தென்றல் என்னை தீண்டியதாய்...
சாரல் என்னை சீண்டியதாய்...
எனக்குள் ஒரு கிளுகிளுப்பு
உன் பிஞ்சு விரல்களை தாங்கையில்
நிலவை கையில் ஏந்தியதாய்...
பூக்களே என்னை தாங்குவதாய்
எனக்குள் ஒரு பூரிப்பு...
என் மடியில் உன் தலை சாயுகையில்
பாவாய் நீயும்
பாவை ஏந்தி
விளையாடும் ஒரு கணத்தில்
பூவாய் மாறி
உன் தாய் நெஞ்சும்
அமிர்தம் சுமப்பது அறிவாயோ?
ஆயிரம் நாட்கள் காத்திருந்து
ஆறுதலாக பிறந்தவளே!
ஆறு வருடம் கூட உன் ஆயுள்
இறைவன் விதியில் நிலைக்கலையே?
தாங்கிய காம்புகள் தனித்திருக்கிறது
கனவிலாவது நீ வருவாய்
ஆயுள் முழுக்க உன் நினைவிருக்க
மாறி மாறி முத்தமிடுவாய்
-ஜாவிட் ரயிஸ்
.
Labels:
ரசித்த கவிதைகள்
சிறகிழந்து போனேன் தோழி
சகியே!- என் சகியே
தனியே நான் நீயெங்கே?
கரம் கோர்த்து நின்றவளே!- உன்
கரும்பான பேச்செங்கே?
எந்தன் நெஞ்சை பஞ்சனையாக்கி
தஞ்சம் கொண்ட மூச்செங்கே?
கன்னியில்லையே- என்
கவிதை சொல்லவே
தண்ணியில்லையே- கண்ணில்
விம்மி விம்மியே
வானம் பார்த்து
வானவில் பார்த்து
வான் நிலவை கேட்டு விட்டேன்
வாசல் வந்த தென்றல் காற்றை
வழி மறித்தும் கேட்டு விட்டேன்
கனவில் பூக்கும் கடுகுப்பூவே!
கண்ணே நீ போனதெங்கே?
தணலில் நானும் தூங்குகின்றேன்
தண்ணியாக வா இங்கே!
-ஜாவிட் ரயிஸ்
.
தனியே நான் நீயெங்கே?
கரம் கோர்த்து நின்றவளே!- உன்
கரும்பான பேச்செங்கே?
எந்தன் நெஞ்சை பஞ்சனையாக்கி
தஞ்சம் கொண்ட மூச்செங்கே?
கன்னியில்லையே- என்
கவிதை சொல்லவே
தண்ணியில்லையே- கண்ணில்
விம்மி விம்மியே
வானம் பார்த்து
வானவில் பார்த்து
வான் நிலவை கேட்டு விட்டேன்
வாசல் வந்த தென்றல் காற்றை
வழி மறித்தும் கேட்டு விட்டேன்
கனவில் பூக்கும் கடுகுப்பூவே!
கண்ணே நீ போனதெங்கே?
தணலில் நானும் தூங்குகின்றேன்
தண்ணியாக வா இங்கே!
-ஜாவிட் ரயிஸ்
.
Labels:
ரசித்த கவிதைகள்
என்னையும் கவிஞன் ஆக்கியதற்கு நன்றி!!!
என்னையும் கவிஞன் ஆகியதற்கு நன்றி!!!
அன்று என் புன்னகை கவிதை ஆகியது !
இன்று என் கண்ணீர் கவிதை ஆகியது !!
அன்றும் சரி இன்றும் சரி
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....
அன்று உலகை நான் ரசித்தேன் !
இன்று உலகம் என்னை ரசிக்கிறது !!
அன்றும் சரி இன்றும் சரி
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....
அன்று நீ என் அருகில் - என் நினைவில் நீ !
இன்று நீ தொலைவில் - என் நினைவில் நீயே !!
அன்றும் சரி இன்றும் சரி
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....
அன்று நடக்கபோவதை யோசித்தேன் !
இன்றோ நடந்ததை நேசிக்கிறேன் !!
அன்றும் சரி இன்றும் சரி
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....
அன்று நடக்காது என்ற பொது நடந்தது...
நடக்கும் என நினைத்த பொது முடிந்தது...
முடிந்ததெல்லாம் இன்று வடிந்தது...
நீயி...
நீராய்...
கண்ணீராய் .....
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....
Regards,
Vijee
Labels:
ரசித்த கவிதைகள்
Thursday, May 27, 2010
நீயில்லை அருகில்
அன்புக்காய் ஏங்குகிறேன்
அரவணைத்திட
நீயில்லை அருகில்
பட்ட காயங்களின் வேதனையில்
தவிக்கிறேன் - தடவிட
நீயில்லை அருகில்
தூக்கத்தை தொலைத்து
இரவுகளில் விழித்திருக்கிறேன்
ஏனென்று கேட்க
நீயில்லை அருகில்
சந்தோசத்தை சொல்லி
சந்தோசிக்க விரும்புகிறேன்
நீயில்லை அருகில்
கன்னத்தில் வழியும்
கண்ணீர் கோடுகளே- இப்போது
சொந்தம் எனக்கு
யாருக்கும் தெரியாமல்
துடைத்துக் கொள்கிறேன்
என் மௌன அழுகை
உன் இதயத்தை பிழியும்
நான் அறிவேன்
இப்படியே வழிகளை வாழ்வாக்கி
வாழ்கிறது இந்த ஜீவிதம்
அன்னையே!
உன் அருகிருக்க துடிக்கிறேன்
முடியவில்லையே?
அரவணைத்திட
நீயில்லை அருகில்
பட்ட காயங்களின் வேதனையில்
தவிக்கிறேன் - தடவிட
நீயில்லை அருகில்
தூக்கத்தை தொலைத்து
இரவுகளில் விழித்திருக்கிறேன்
ஏனென்று கேட்க
நீயில்லை அருகில்
சந்தோசத்தை சொல்லி
சந்தோசிக்க விரும்புகிறேன்
நீயில்லை அருகில்
கன்னத்தில் வழியும்
கண்ணீர் கோடுகளே- இப்போது
சொந்தம் எனக்கு
யாருக்கும் தெரியாமல்
துடைத்துக் கொள்கிறேன்
என் மௌன அழுகை
உன் இதயத்தை பிழியும்
நான் அறிவேன்
இப்படியே வழிகளை வாழ்வாக்கி
வாழ்கிறது இந்த ஜீவிதம்
அன்னையே!
உன் அருகிருக்க துடிக்கிறேன்
முடியவில்லையே?
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
எனக்கென நீ உனக்காக நான்
எனக்கென ஒருவன்.....
எனக்கே எனக்கா?
என் நட்புலகின் அரசனாய்
என்றும் நீ தோழன் ....
என்னை காக்க...
என்னை நேசிக்க ...
நண்பனே!
எனக்கும் உனக்கும் என்ன உறவு ?
மலரை காக்கும் முள்ளின் உறவா?
உன் மனம் புரியாமல் நான் இல்லை,
என் மனம் புரியாமல் நீ இல்லை
நட்பில் பரிசு நீ அல்லவா
சொந்தங்கள் எல்லாம் சோகங்கலாகிவிட...
என் உறவின் , இனிய பந்தமாய் நீ...
நண்பன் என்று சொல்லிக்கொள்ள,
என் வாழ்வில் ஒருவன்
என் சுகங்களிலும், சோகங்களிலும்,
தவறாது பங்கேற்க .. நீ..
என்னை நண்பியாய் ஏற்றவவன் நீ
உனக்காக தாயாய்...
ஓர் சிநேகிதியாய்...
என்றும் நான் ...
எனக்கே எனக்கா?
என் நட்புலகின் அரசனாய்
என்றும் நீ, தோழன் ....
என்னை காக்க...
என்னை நேசிக்க...
எனக்கென நீ உனக்காக நான்
என்றும் நட்புடன்
- நிலவு
எனக்கே எனக்கா?
என் நட்புலகின் அரசனாய்
என்றும் நீ தோழன் ....
என்னை காக்க...
என்னை நேசிக்க ...
நண்பனே!
எனக்கும் உனக்கும் என்ன உறவு ?
மலரை காக்கும் முள்ளின் உறவா?
உன் மனம் புரியாமல் நான் இல்லை,
என் மனம் புரியாமல் நீ இல்லை
நட்பில் பரிசு நீ அல்லவா
சொந்தங்கள் எல்லாம் சோகங்கலாகிவிட...
என் உறவின் , இனிய பந்தமாய் நீ...
நண்பன் என்று சொல்லிக்கொள்ள,
என் வாழ்வில் ஒருவன்
என் சுகங்களிலும், சோகங்களிலும்,
தவறாது பங்கேற்க .. நீ..
என்னை நண்பியாய் ஏற்றவவன் நீ
உனக்காக தாயாய்...
ஓர் சிநேகிதியாய்...
என்றும் நான் ...
எனக்கே எனக்கா?
என் நட்புலகின் அரசனாய்
என்றும் நீ, தோழன் ....
என்னை காக்க...
என்னை நேசிக்க...
எனக்கென நீ உனக்காக நான்
என்றும் நட்புடன்
Labels:
நிலாவின் கவிதைகள்
ஏக்கம்
ஒரு முறை சந்தித்தேன்
பலமுறை
சிந்திக்க வைத்தாய்....
இப்போது ...
பலமுறை சிந்திக்கிறேன்
ஒரு முறையாவது
சந்திப்போமா என்று
பலமுறை
சிந்திக்க வைத்தாய்....
இப்போது ...
பலமுறை சிந்திக்கிறேன்
ஒரு முறையாவது
சந்திப்போமா என்று
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Saturday, May 22, 2010
என் ஆசை
நீயும் என்னை கொஞ்சம் தேடவேண்டும் என்று
தொலைந்து போக தான் கொஞ்சம் ஆசை...
என்னால் தான் முடியவில்லையே
உன்னை காணாமல் ஒரு நிமிடத்தையும் கழித்துவிட....!
ஆனால் நீ மட்டும் தொலைந்து போகின்றாய்
மேகத்திட்குள்......!
-நிலவு
தொலைந்து போக தான் கொஞ்சம் ஆசை...
என்னால் தான் முடியவில்லையே
உன்னை காணாமல் ஒரு நிமிடத்தையும் கழித்துவிட....!
ஆனால் நீ மட்டும் தொலைந்து போகின்றாய்
மேகத்திட்குள்......!
-நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
நீ மட்டும்தான்!!!
என்னை அடிக்காமல்
அழ வைப்பது
நீ மட்டும்தான்!!!
என்னை காயப்படுத்தாமல்
வழிகள் தருவது
நீ மட்டும்தான்!!!
என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவது
நீ மட்டும்தான்!!!
என்னை சிதைக்காமல்
சித்திரவதை செய்யாதது
நீ மட்டும்தான்!!!
நான் வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும்
என்னோடு இருப்பது
நீ மட்டும்தான்!!!
-நிலவு
அழ வைப்பது
நீ மட்டும்தான்!!!
என்னை காயப்படுத்தாமல்
வழிகள் தருவது
நீ மட்டும்தான்!!!
என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவது
நீ மட்டும்தான்!!!
என்னை சிதைக்காமல்
சித்திரவதை செய்யாதது
நீ மட்டும்தான்!!!
நான் வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும்
என்னோடு இருப்பது
நீ மட்டும்தான்!!!
-நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
அன்பு
உன்னுடன் பேசும் போது
உலகத்தை மறைந்தேன்,
பேசிய பின் என்னை மறைந்தேன்,
உன்னை நினைத்து
எனக்கு
வேண்டியவர்களை யும் மறந்தேன்..
என்மேல்
அன்பு வைத்தவர்களையும்மறந்தேன்...
ஆனால் நீ மட்டும்
என்னை மறந்ததேன்.....?
இன்றுவரை புரியவில்லை
எது உண்மையான அன்பு என்று.
உலகத்தை மறைந்தேன்,
பேசிய பின் என்னை மறைந்தேன்,
உன்னை நினைத்து
எனக்கு
வேண்டியவர்களை யும் மறந்தேன்..
என்மேல்
அன்பு வைத்தவர்களையும்மறந்தேன்...
ஆனால் நீ மட்டும்
என்னை மறந்ததேன்.....?
இன்றுவரை புரியவில்லை
எது உண்மையான அன்பு என்று.
-நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)