Sunday, December 5, 2010

நீ , நான் , நிலவு




நீ , நான் , நிலவு 
எல்லாம் கனவாய் போனது 
நீயும் இல்லை நிலவும் இல்லை
நான் மட்டும் , நம்  நினைவுகளோடு
தனிமையில்....


- நிலவு

Saturday, December 4, 2010

நினைவுகளே தொலைந்துவிடு







தினம் தினம் கனவில் உன் முகம்
மறக்க நினைக்கும் உன் நினைவுகளை
ஜாபகப்படுதிக்கொண்டு.....



*********


பனித்துளிகளாய் குளிர்ந்த உன் நினைவுகள்  இப்பொழுது
நெருப்பு இல்லாமலே எரிந்துகொண்டு....

*********



மொட்டுகளாய் மலர்ந்த கனவுகள் இப்பொழுது  முட்களாய்
தினம் குத்திக்கொண்டு....
**********


உன் நினைவுகளும் தொலைந்து போ...!
என் கனவுகளும் தொலைந்து போ....!

- நிலவு

Tuesday, November 30, 2010

உன் ரசிகை













வான்  நிலவை ரசிக்க பலர் உண்டு 

அனால் அந்த நிலவுக்கு  மட்டும்


ஏன் உன் மேல்  மையல் உண்டு ?

எதனை  ரசிகர்கள் உனக்கு இருந்தும் 


ஏன்  உன் நிழலை  மட்டுமே பின்

தொடர்ந்துகொண்டு...?




- நிலவு

நீயே.... என் நினைவுக்குள்








உன் நினைவுகளை மறக்க நினைகின்றேன்..... 

மீண்டும் , மீண்டும் நீயே....  என் நினைவுக்குள்....

கடவுளிடம்    தினம்  வரம் கேட்டேன் ....

என் உயிரை குடித்துகொண்டிரும் உன் நினைவுகளை

தொலைத்துவிட ஒரு வரம் கொடு    என்று ......!


- நிலவு

அவன்














என் கவிதைகளுக்கு கருவாக 
மறைந்து இருப்பது அவன் மட்டுமே....


அவன் மட்டும்  என் கவிதைகளை 
கண்டும் கானாமல் மறைந்து கொண்டு ....!






- நிலவு

Wednesday, November 17, 2010

அன்புக்காக




நீ ....நினைப்பது 
 நம் அன்பை துண்டிக்க 

நான்.... நினைப்பது 
நம் அன்பை  தொடர.....

உன் அன்பு
பொய்யானதோ மெய்யானதோ...

பாவம் அறியாது  கபடமற்ற என் நெஞ்சம்....

உயிள்ளவரை ஏங்கிகொடிருக்கிறது   

உன் அன்பிற்காக...

.

அன்புடன்,,,,,


- நிலவு

Sunday, November 7, 2010

வழியும் என் கண்ணீரே





வழியும் என் கண்ணீரே......!
என் வழித்துணையாக வருவாயா...?
வேறு துணை வேண்டாம் எனக்கு


இந்த வலியிலும் ஒரு
ஆனந்தம் எனக்கு...


என்னுடன் நீயாவது  எனக்காக  நிரந்தரமாக வருவாயா?






- நிலவு

இடைவெளி








உன்னை மறந்து நீயும்
என்னை மறந்து நானும்
பேசிக்கொண்டு இருக்கையில்...

நம் நட்பிற்குள்   உள்ள 
ஒரு சிறு இடைவெளியை  

நம்மை அறியாமல் நிரப்பிக்கொண்டு இருக்கையில்

திடீர் என்றொரு மின்னல் கீற்று.....

மீண்டும் ஒரு இடைவெளி
மீண்டும் மௌனம்...........

இந்த இடைவெளிக்கும் மௌனதிட்கும்
பெயர் தான் என்ன ?

விடை தெரியாமல் நாம்.....!


- நிலவு

Wednesday, October 20, 2010

உடைந்தது இதயம்







என்னை  வெறுப்பது  உன்  குற்றமா ...?
நான்  உன்னை வெறுப்பது  என்   குற்றமா ..?    
                         
 இருப்பினும்.......

உனக்காக  வாங்கி வந்த பரிசை 
மட்டுமல்ல  என்  இதயத்தையும் அன்போடு 
உன்னிடம்    கொடுத்தேன்......
தூக்கி  எறிந்துவிட்டாய்  ....!


ஹம்ம்........!

 தூக்கி எரிந்தது என் பரிசை மட்டுமல்ல
 என் இதயத்தையும் கூட
 சுக்கு நூறாக என் இதயம்


- நிலவு

என் முதல் சுவாசம்









என் தாயின் கருவறையை  பிரிந்தனால்...
என் முதல் சுவாசமும் அழுகையில்....!


உன் இதயவரையை பிரிந்ததனால்
என் கடைசி சுவாசமும்  அதே அழுகையில்....!








- நிலவு

Saturday, September 4, 2010

நீ அறிவாயா?













உறவுகள் இல்லை

என்று ஏங்கி தவித்தாய்

உறவாக நான் உனக்கும்

உயிராக நீ எனக்கும்.....

என்று.....

*****
உனக்கு நான் ஆறுதலாக

எனக்கு நீ ஆறுதலாக

******


இன்று உறவுகளோடு நீ.....!

******


நான் மட்டும் தனிமயரையில்

உன் நினைவுகளோடும்

கண்களில் கண்ணீரோடும்

******
பாவாம் நீ...

என் கன்னத்தில் வழியும் கண்ணீருக்கு

கூட அர்த்தம் புரியாமல்...

ஆனந்த கண்ணீரா ,வேதனை கண்ணீரா என்று...!



- நிலவு

Wednesday, September 1, 2010

உன் குரல்.









அத்துனை மலர்களின்
நறுமணங்களையும்
ஒன்றாய் பூசி விடும்
தென்றல் காற்றாய்
உன் குரல்.....


என்ன வசியம்
வைத்துள்ளாய்
வார்த்தைகளில்
அனைத்தும்மறந்து
உன் குரல் கேட்க
பித்து பிடித்தாற்ப்போல்
மனம்..




உன் குர‌ல் கேட்காத‌
அழ‌கான‌ அதிகாலை
கூட‌ இன்று
அல‌ங்கோல‌மாய்....

முடிய‌வில்லை
உனை அழைக்க‌முய‌ன்றாலும்
முடியா எட்டாதூர‌த்தில்
என்னை ம‌ற‌ந்துஎன்ன
செய்துக்கொண்டிருப்பாய்

நீ....ம்ம் என்று ஒரு
வார்த்தை மொழிந்துவிடு
இந்த‌ நாள் இனிய‌நாள்
என‌க்கு...





சிநேகிதி

Tuesday, August 31, 2010

நட்பு பாதை








தடு மாறும் போது
தாங்கி பிடித்தாய்....

தடம் மாறும் போது
தட்டிக் கேட்டாய்....

*********
உனக்கு துணையாக நான்.....
எனக்குதுனையாக நீ......

நம் நட்பு பாதையில் தடைகள் இன்றி
தொடர்ந்தோம் மகிழ்ந்தோம்

*********
இன்று நீயே....

பாதியில் தடங்கல் மாறி
பாதைகளையும் மாற்றி

நீ எங்கோ நான் எங்கோ....

**********
நீ பிரிந்தாலும் உன் நட்பின் நினைவுகள்
என்றும் என்னுடன்.....!

*********
நட்புடன்...

- நிலவு

Wednesday, August 25, 2010

ஹலோ!

நீ என்னுடன் பேசாவிட்டாலும்
நான் உன்னுடன் பேசாவிட்டாலும்
உன் "ஹலோ"
என்ற குரலை கேட்க
தினம் உன் தொலைபேசி
என்னை சுழற்றுகிறேன்
உனக்கு தெரியுமா? 

- நிலவு 


.

பிரிவு

பாதியில் பிரிந்து சென்றாய்!
பாவை மனதை
பறித்து சென்றாய்!
போனது போய்விட்டாய்


ஏன் உன் நினைவுகளை மட்டும்
விட்டுச் சென்றாய்?
உன் நினைவுகளால்
உருகி... உருகி...
என் உயிரையும்
பிரித்து செல்லத் தானோ?   


- நிலவு 




/

Monday, August 23, 2010

உன் இதயத்திடம் கேள்!

யாரை நேசிக்கிறாய்
என்று
என்னிடம் கேட்காதே!

உன் இதயத்திடம் கேள் !

காரணம்...
என் இதயம் உன்னிடத்தில்


- நிலவு 


.

உன்னிடமே

நீ என்னிடம் இருந்து ஒரு படி
விலகி நின்றால்...
நான் இரு படி விலகி நிற்க
நினைக்கிறேன்!

முடியவில்லை...

உன்னிடமே
இன்னொரு படி அதிகமாக
நெருங்குகிறேன்
என்று உணர்கிறேன் 


- நிலவு 


.

Sunday, August 22, 2010

அன்புத் தோழன்

என் மனதின் காயங்கள்...
இன்பங்கள் ,துன்பங்கள் ...
தேவைகள், ஆசைகள்...
கனவுகள்...

எல்லாம் தெரிந்து
அறிந்து, புரிந்து
பகிர்ந்துகொள்ள
காயப்பட்ட மனதுக்கு ஆறுதலாக, மருந்தாக
நீ வந்தாய் எனக்கே எனக்காக
ஒரு அன்பு தோழனாய்

இன்று உன் மௌனத்தால்
என் மனதிற்கு மேலும் காயங்களை
கொடுக்காதே...!

தாங்கிக்கொள்ள சக்தியில்லை
என் இதயத்திற்கு..
புரிந்துகொள்.. ! 




- நிலவு 



.

இறந்துகொண்டு இருக்கிறேன்

 உன் கடும் வார்த்தைகளால்
என்னை கொள்வதை விட
மௌனமாகவே இருந்துவிடு!
உன் மௌனத்தையேனும் ரசிக்கிறேன்

உன் கடும் பார்வைகளால் பார்த்து
என்னை கொள்வதை விட
நீ பார்க்காமலே இருந்துவிடு!
நானாவது உன்னை பார்த்து ரசிக்கிறேன்

நீ உன் வார்த்தைகளாலும், பார்வைகளாலும்
என் இதயத்தை கொன்றுவிட்டாய்!

இன்று உன் மௌனத்தால்
நான் தினம் இறந்துகொண்டிருக்கிறேன்!



- நிலவு 



.

உன் பெயர் சொல்லும்

என் இதய துடிப்பை
உன்னால் உணரமுடியவில்லை
என்றாலும்

என் நாடித்துடிப்பை உணர்ந்து பார்
ஒவ்வொன்றும்
உன் பெயர் சொல்லும் 

- நிலவு 


.

உன் முடிவில் என் ஆரம்பம்...

அன்று நீ எனக்காய் ஆரம்பித்த வரிகளில்
ஏனோ வைத்தாய் முற்றுப்புள்ளி?

இன்றுவரை புரியவில்லை

நீ வைத்த புள்ளியில் இருந்து
ஆரம்பித்த வரிகளாய் முடிக்க முடியாமல்
தொடர்கிறேன்...
உனக்காய்....

முடிப்பது எப்படி என்று புரியவில்லை
- நிலவு 


.

என் பிரிவிலும்

உனக்கு கவிதைகள் பிடிக்காது
என்றும் தெரியும்
உன் இதயத்தில் ஈரம் இல்லை என்றும்
எனக்கு தெரியும்
இருந்தும்...

என்றாவது ஒரு நாள்
என் கவிதைகளை
படிக்க நேர்ந்தால் ...

என் கவிதைகளும்
உன்னை எந்த அளவு நேசித்தது
என்று உனக்கு புரியும்

பின்பாவது ஒரு சொட்டு
கண்ணீரின் ஈரம்
போதும் என் கல்லறை
ரோஜாவிற்கு  


- நிலவு 


.

என் கனவு


உன் நினைவுகளுடன் வாழ்ந்தேன்..

நிஜங்களையும் மறந்தேன்...
கனவில் மிதந்தேன்.....
...
கனவில் இருந்து மீண்டேன்....
இன்று நிஜங்களும் கனவாகி போனது

என்று புரிந்து கொண்டேன்... 

- நிலவு 


.

கருவறைச் சுகம்

அன்னையே!
உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை பயமுறுத்துகிறது


உன் உதிரத்தில் நானிருந்தேன்

உணர்ந்தது பூ வாசம் - இன்று
உலகத்தில் நானிருக்க
உணர்வதெல்லாம் பிண வாசம்


நிசப்தத்தின் மத்தியிலே

என்னை தாலாட்டியது
உன் நாடித்துடிப்பு- இன்று
சப்தங்களால்...
நிசப்தமாக பார்கிறது
என் இதயத்துடிப்பு


மொழிகளெல்லாம் அங்கிருக்கவில்லை

என் அசைவு மொழிகளுக்கு
பக்குவமாய் நீ
பதில் சொன்னாய்

மொழிகளால் தான்
இங்கு சிலபேர்
எலிகளாய்...
ஒழிய வேண்டி இருக்கிறது


என் உலகம்

மூடி தான் இருந்தாலும்
மூச்சுக்காற்றுக்காய்
தவமிருக்கவில்லை
நான் அன்று

அந்தமின்றி விரிந்தாலும்
என் உலகம்-  சிலவேளை
மூச்சுவிடக் காற்றின்றி
மூர்ச்சையாகி போகின்றேன் இன்று


அன்னையே!

உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை பயமுறுத்துகிறது

         -ஜாவிட் ரயிஸ்


.

விதி வைத்த முற்றுப்புள்ளி

மகளே!

மூச்சுக் காற்று மட்டும்
உரிமை கோரும்
ஏகாந்தமான இரவொன்றில்
உன் நினைவுகளை
கொஞ்சம் அசை போடுகிறேன்...

தாயின் கருவறைக்கு
அர்த்தம் கொடுத்தவளே!
தந்தை என் மனதில்
பூவாய்  பூத்தவளே!

உறக்கம் இன்றிய இரவுகளில்
உன் அழுகை எனக்கு தாலாட்டு
ஆபீஸ் களைப்பில் வரும் எனக்கு
உன் அழுகை தானே வாடைக்காற்று

தென்றல் என்னை தீண்டியதாய்...
சாரல் என்னை சீண்டியதாய்...
எனக்குள் ஒரு கிளுகிளுப்பு
உன் பிஞ்சு விரல்களை தாங்கையில்

நிலவை கையில் ஏந்தியதாய்...
பூக்களே என்னை தாங்குவதாய்
எனக்குள் ஒரு பூரிப்பு...
என் மடியில் உன் தலை சாயுகையில்

பாவாய் நீயும்
பாவை ஏந்தி
விளையாடும் ஒரு கணத்தில்
பூவாய் மாறி
உன் தாய் நெஞ்சும்
அமிர்தம் சுமப்பது அறிவாயோ?

ஆயிரம் நாட்கள் காத்திருந்து
ஆறுதலாக பிறந்தவளே!
ஆறு வருடம் கூட உன் ஆயுள்
இறைவன் விதியில் நிலைக்கலையே?

தாங்கிய காம்புகள் தனித்திருக்கிறது
கனவிலாவது நீ வருவாய்
ஆயுள் முழுக்க உன் நினைவிருக்க
மாறி மாறி முத்தமிடுவாய்

          -ஜாவிட் ரயிஸ்




.

சிறகிழந்து போனேன் தோழி

சகியே!- என் சகியே
தனியே நான் நீயெங்கே?

 
கரம் கோர்த்து நின்றவளே!- உன்
கரும்பான பேச்செங்கே?
எந்தன் நெஞ்சை பஞ்சனையாக்கி
தஞ்சம் கொண்ட மூச்செங்கே?

 
கன்னியில்லையே- என்
கவிதை சொல்லவே
தண்ணியில்லையே- கண்ணில்
விம்மி விம்மியே

 
வானம் பார்த்து
வானவில் பார்த்து
வான் நிலவை கேட்டு விட்டேன்
வாசல் வந்த தென்றல் காற்றை
வழி மறித்தும் கேட்டு விட்டேன்

 
கனவில் பூக்கும் கடுகுப்பூவே!
கண்ணே நீ போனதெங்கே?
தணலில் நானும் தூங்குகின்றேன்
தண்ணியாக வா இங்கே!


  -ஜாவிட் ரயிஸ்

.

என்னையும் கவிஞன் ஆக்கியதற்கு நன்றி!!!

என்னையும் கவிஞன் ஆகியதற்கு நன்றி!!!

அன்று என் புன்னகை கவிதை ஆகியது !
இன்று என் கண்ணீர் கவிதை ஆகியது !!

அன்றும் சரி இன்றும் சரி
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....

அன்று உலகை நான் ரசித்தேன் !
இன்று உலகம் என்னை ரசிக்கிறது !!

அன்றும் சரி இன்றும் சரி
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....

அன்று நீ என் அருகில் - என் நினைவில் நீ !
இன்று நீ தொலைவில் - என் நினைவில் நீயே !!

அன்றும் சரி இன்றும் சரி
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....

அன்று நடக்கபோவதை யோசித்தேன் !
இன்றோ நடந்ததை நேசிக்கிறேன் !!

அன்றும் சரி இன்றும் சரி
என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....

அன்று நடக்காது என்ற பொது நடந்தது...
நடக்கும் என நினைத்த பொது முடிந்தது...
முடிந்ததெல்லாம் இன்று வடிந்தது...
நீயி...
நீராய்...
கண்ணீராய் .....

என்னை கவிஞன் அகியதற்கு நன்றி....


Regards,
Vijee

இதயத்திருடன்


Thursday, May 27, 2010

வானத்தில் நிலவாக

வானத்தில் நிலவாக இருந்து
நட்சத்திரங்களின் தொல்லை தாங்காமல்
பூமியில் வந்தாள்...

பூமியில் பெண்ணாக பிறந்து
மனிதர்களின் தொல்லை
தாங்க முடியவில்லையோ பெண்ணே...!!! 


- நிலவு

உன்னை விட்டு

உன்னை விட்டு 
என் உயிர் விலகுமா?

கண்ணை விட்டு 
கண் இமை  விலகுமா?

வானில் பல கோடி நட்சத்திரம்   
மின்னினாலும்
ஒரு நிலவுக்கு ஈடு இல்லை
 
உலகில் பல கோடி மனிதர்கள் இருந்தாலும்
உனக்கு நிகரில்லை 



- நிலவு

கடைசியாக ஒரு கவிதை

கடைசியாக ஒரு கவிதை
சொன்னாய்...

என்றுமே என்னை விட்டுப்
 
பிரிய மாட்டாய்என்று

உன்னையா?? 
அல்லது 
உன் நினைவுகளையா..??

- நிலவு

சிறையில்!

கம்பிகளில்லா சிறை
அங்கே நான் கைதியாக

கால் ஒடிந்த பறவையாய்
தனிமை எனும் சிறையில்!

உன் நினைவுகளுடன்

- நிலவு

கலங்கும் மனது

கலங்கமில்லா நிலவே!
எல்லோருக்கும் சந்தோஷத்தை கொடுத்தாய்

ஆனால்.....

உனக்குள் ஒரு கலங்கும் மனதும்
மௌன அழுகையையும்
யார் அறிவார்?

பலகோடி மக்களுக்கு
ஆறுதல் சொல்ல நீ!
உனக்கு ஆறுதலாக யாரோ?

- நிலவு

என் கண்களில் கண்ணீர்

அன்று நீ அழுதததால் உன்னை

“சிரிக்க வைத்தேன்”

கண்ணீரை துடைத்து விட்டேன்...!

இன்று நீ சிரித்து என்னை

"அழவைகின்றாய்"

என் கண்களில் கண்ணீர்....!



- நிலவு

நீயில்லை அருகில்

அன்புக்காய் ஏங்குகிறேன்
அரவணைத்திட
நீயில்லை அருகில்

பட்ட காயங்களின் வேதனையில்
தவிக்கிறேன் - தடவிட
நீயில்லை அருகில்

தூக்கத்தை தொலைத்து
இரவுகளில் விழித்திருக்கிறேன்
ஏனென்று கேட்க
நீயில்லை அருகில்

சந்தோசத்தை சொல்லி
சந்தோசிக்க விரும்புகிறேன்
நீயில்லை அருகில்

கன்னத்தில் வழியும்
கண்ணீர் கோடுகளே- இப்போது
சொந்தம் எனக்கு
யாருக்கும் தெரியாமல்
துடைத்துக் கொள்கிறேன்

என் மௌன அழுகை
உன் இதயத்தை பிழியும்
நான் அறிவேன்

இப்படியே வழிகளை வாழ்வாக்கி
வாழ்கிறது இந்த ஜீவிதம்

அன்னையே!
உன் அருகிருக்க  துடிக்கிறேன்
முடியவில்லையே?

- நிலவு

ரசித்தேன் உன் பொய்களையும்

 நீ சொல்வது
பொய் என்று தெரிந்தும்
உன்மேல் கோபமில்லை

உன் பொய்களையும் ரசித்தேன்
என் சன்தோஷத்திட்காய்த் தான்
பொய் சொல்கிறாய் என்று

- நிலவு

திறவுகோல்

 பூட்டிய என் மனக்கதவை
திறந்து வைத்தவன் நீ!

அன்பே!

இன்று என் மனத்தை
தவிக்கவிட்டு
உன் மனக்கதவை
பூட்டிக் கொண்டதேன்? 

- நிலவு

இணைப்பு


தினமும் உன் பெயரையும்
என் பெயரையும்
எழுதி இணைத்துப் பார்ப்பேன்

நிஜத்தில் ஒன்று சேர
முடியாமல் போனாலும்...

நிழலில் நம் பெயர்களாவது
ஒன்று சேரட்டும்  என்று


- நிலவு

எனது முதல் கவிதை...

ஆடைகள் இருந்தும்
ஆடம்பரத்தில் மூழ்கி
அரை குறை ஆடையில்
பணக்காரன்!

அரை முழ துணிக்காக- தன்
மானத்தை மறைக்க
ஏங்கிக்கொண்டிருக்கிறது
குடிசையில்....

"ஏழை மானங்கள்"

 

- நிலவு

எனக்கென நீ உனக்காக நான்

எனக்கென ஒருவன்.....
எனக்கே எனக்கா?

என் நட்புலகின் அரசனாய்
என்றும் நீ தோழன் ....

என்னை காக்க...
என்னை நேசிக்க ...

நண்பனே!

எனக்கும் உனக்கும் என்ன உறவு ?
மலரை காக்கும் முள்ளின் உறவா?

உன் மனம் புரியாமல் நான் இல்லை,
என் மனம் புரியாமல் நீ இல்லை

நட்பில் பரிசு நீ அல்லவா

சொந்தங்கள் எல்லாம் சோகங்கலாகிவிட...

என் உறவின் , இனிய பந்தமாய் நீ...

நண்பன் என்று சொல்லிக்கொள்ள,
என் வாழ்வில் ஒருவன்

என் சுகங்களிலும், சோகங்களிலும்,
தவறாது பங்கேற்க .. நீ..

என்னை நண்பியாய் ஏற்றவவன் நீ
உனக்காக தாயாய்...
ஓர் சிநேகிதியாய்...
 என்றும் நான் ...

எனக்கே எனக்கா?

என் நட்புலகின் அரசனாய்
என்றும் நீ, தோழன் ....

என்னை காக்க...
என்னை நேசிக்க...

எனக்கென நீ உனக்காக நான்

என்றும் நட்புடன்


- நிலவு

நினைவுப் பரிசு

 உன் கண்ணீர் என் கண்களில்;
என் புன்னகை உன் உதடுகளில் ;

போய் வா அன்பே!

இடம் மாறிப் போகின்றோம்
இதயங்களை
மாற்றிக்கொள்ளாமல்

நினைவுப் பரிசு எதற்கு?
உன் நினைவே பரிசு எனக்கு! 


  -நிலவு

ஏக்கம்

ஒரு முறை சந்தித்தேன்
பலமுறை
சிந்திக்க வைத்தாய்....

இப்போது ...

பலமுறை சிந்திக்கிறேன்
ஒரு முறையாவது
சந்திப்போமா என்று


- நிலவு

Saturday, May 22, 2010

என் ஆசை

நீயும் என்னை கொஞ்சம் தேடவேண்டும் என்று
தொலைந்து போக தான் கொஞ்சம் ஆசை...

என்னால் தான் முடியவில்லையே
உன்னை காணாமல் ஒரு நிமிடத்தையும் கழித்துவிட....!

ஆனால் நீ மட்டும் தொலைந்து போகின்றாய்

மேகத்திட்குள்......!

    -நிலவு

நீ மட்டும்தான்!!!

என்னை அடிக்காமல்
அழ வைப்பது
நீ மட்டும்தான்!!!

என்னை காயப்படுத்தாமல்
வழிகள் தருவது
நீ மட்டும்தான்!!!

என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவது
நீ மட்டும்தான்!!!

என்னை சிதைக்காமல்
சித்திரவதை செய்யாதது
நீ மட்டும்தான்!!!

நான் வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும்
என்னோடு இருப்பது
நீ மட்டும்தான்!!!
  
  -நிலவு

அன்பு

உன்னுடன் பேசும் போது
உலகத்தை மறைந்தேன்,
பேசிய பின் என்னை மறைந்தேன்,


உன்னை நினைத்து
எனக்கு
வேண்டியவர்களை யும் மறந்தேன்..
என்மேல்
அன்பு வைத்தவர்களையும்மறந்தேன்...


ஆனால் நீ மட்டும்
என்னை மறந்ததேன்.....?
இன்றுவரை புரியவில்லை

எது உண்மையான அன்பு என்று.


    -நிலவு