Tuesday, November 30, 2010

உன் ரசிகை













வான்  நிலவை ரசிக்க பலர் உண்டு 

அனால் அந்த நிலவுக்கு  மட்டும்


ஏன் உன் மேல்  மையல் உண்டு ?

எதனை  ரசிகர்கள் உனக்கு இருந்தும் 


ஏன்  உன் நிழலை  மட்டுமே பின்

தொடர்ந்துகொண்டு...?




- நிலவு

நீயே.... என் நினைவுக்குள்








உன் நினைவுகளை மறக்க நினைகின்றேன்..... 

மீண்டும் , மீண்டும் நீயே....  என் நினைவுக்குள்....

கடவுளிடம்    தினம்  வரம் கேட்டேன் ....

என் உயிரை குடித்துகொண்டிரும் உன் நினைவுகளை

தொலைத்துவிட ஒரு வரம் கொடு    என்று ......!


- நிலவு

அவன்














என் கவிதைகளுக்கு கருவாக 
மறைந்து இருப்பது அவன் மட்டுமே....


அவன் மட்டும்  என் கவிதைகளை 
கண்டும் கானாமல் மறைந்து கொண்டு ....!






- நிலவு

Wednesday, November 17, 2010

அன்புக்காக




நீ ....நினைப்பது 
 நம் அன்பை துண்டிக்க 

நான்.... நினைப்பது 
நம் அன்பை  தொடர.....

உன் அன்பு
பொய்யானதோ மெய்யானதோ...

பாவம் அறியாது  கபடமற்ற என் நெஞ்சம்....

உயிள்ளவரை ஏங்கிகொடிருக்கிறது   

உன் அன்பிற்காக...

.

அன்புடன்,,,,,


- நிலவு

Sunday, November 7, 2010

வழியும் என் கண்ணீரே





வழியும் என் கண்ணீரே......!
என் வழித்துணையாக வருவாயா...?
வேறு துணை வேண்டாம் எனக்கு


இந்த வலியிலும் ஒரு
ஆனந்தம் எனக்கு...


என்னுடன் நீயாவது  எனக்காக  நிரந்தரமாக வருவாயா?






- நிலவு

இடைவெளி








உன்னை மறந்து நீயும்
என்னை மறந்து நானும்
பேசிக்கொண்டு இருக்கையில்...

நம் நட்பிற்குள்   உள்ள 
ஒரு சிறு இடைவெளியை  

நம்மை அறியாமல் நிரப்பிக்கொண்டு இருக்கையில்

திடீர் என்றொரு மின்னல் கீற்று.....

மீண்டும் ஒரு இடைவெளி
மீண்டும் மௌனம்...........

இந்த இடைவெளிக்கும் மௌனதிட்கும்
பெயர் தான் என்ன ?

விடை தெரியாமல் நாம்.....!


- நிலவு