Thursday, May 27, 2010
நீயில்லை அருகில்
அன்புக்காய் ஏங்குகிறேன்
அரவணைத்திட
நீயில்லை அருகில்
பட்ட காயங்களின் வேதனையில்
தவிக்கிறேன் - தடவிட
நீயில்லை அருகில்
தூக்கத்தை தொலைத்து
இரவுகளில் விழித்திருக்கிறேன்
ஏனென்று கேட்க
நீயில்லை அருகில்
சந்தோசத்தை சொல்லி
சந்தோசிக்க விரும்புகிறேன்
நீயில்லை அருகில்
கன்னத்தில் வழியும்
கண்ணீர் கோடுகளே- இப்போது
சொந்தம் எனக்கு
யாருக்கும் தெரியாமல்
துடைத்துக் கொள்கிறேன்
என் மௌன அழுகை
உன் இதயத்தை பிழியும்
நான் அறிவேன்
இப்படியே வழிகளை வாழ்வாக்கி
வாழ்கிறது இந்த ஜீவிதம்
அன்னையே!
உன் அருகிருக்க துடிக்கிறேன்
முடியவில்லையே?
அரவணைத்திட
நீயில்லை அருகில்
பட்ட காயங்களின் வேதனையில்
தவிக்கிறேன் - தடவிட
நீயில்லை அருகில்
தூக்கத்தை தொலைத்து
இரவுகளில் விழித்திருக்கிறேன்
ஏனென்று கேட்க
நீயில்லை அருகில்
சந்தோசத்தை சொல்லி
சந்தோசிக்க விரும்புகிறேன்
நீயில்லை அருகில்
கன்னத்தில் வழியும்
கண்ணீர் கோடுகளே- இப்போது
சொந்தம் எனக்கு
யாருக்கும் தெரியாமல்
துடைத்துக் கொள்கிறேன்
என் மௌன அழுகை
உன் இதயத்தை பிழியும்
நான் அறிவேன்
இப்படியே வழிகளை வாழ்வாக்கி
வாழ்கிறது இந்த ஜீவிதம்
அன்னையே!
உன் அருகிருக்க துடிக்கிறேன்
முடியவில்லையே?
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
எனக்கென நீ உனக்காக நான்
எனக்கென ஒருவன்.....
எனக்கே எனக்கா?
என் நட்புலகின் அரசனாய்
என்றும் நீ தோழன் ....
என்னை காக்க...
என்னை நேசிக்க ...
நண்பனே!
எனக்கும் உனக்கும் என்ன உறவு ?
மலரை காக்கும் முள்ளின் உறவா?
உன் மனம் புரியாமல் நான் இல்லை,
என் மனம் புரியாமல் நீ இல்லை
நட்பில் பரிசு நீ அல்லவா
சொந்தங்கள் எல்லாம் சோகங்கலாகிவிட...
என் உறவின் , இனிய பந்தமாய் நீ...
நண்பன் என்று சொல்லிக்கொள்ள,
என் வாழ்வில் ஒருவன்
என் சுகங்களிலும், சோகங்களிலும்,
தவறாது பங்கேற்க .. நீ..
என்னை நண்பியாய் ஏற்றவவன் நீ
உனக்காக தாயாய்...
ஓர் சிநேகிதியாய்...
என்றும் நான் ...
எனக்கே எனக்கா?
என் நட்புலகின் அரசனாய்
என்றும் நீ, தோழன் ....
என்னை காக்க...
என்னை நேசிக்க...
எனக்கென நீ உனக்காக நான்
என்றும் நட்புடன்
- நிலவு
எனக்கே எனக்கா?
என் நட்புலகின் அரசனாய்
என்றும் நீ தோழன் ....
என்னை காக்க...
என்னை நேசிக்க ...
நண்பனே!
எனக்கும் உனக்கும் என்ன உறவு ?
மலரை காக்கும் முள்ளின் உறவா?
உன் மனம் புரியாமல் நான் இல்லை,
என் மனம் புரியாமல் நீ இல்லை
நட்பில் பரிசு நீ அல்லவா
சொந்தங்கள் எல்லாம் சோகங்கலாகிவிட...
என் உறவின் , இனிய பந்தமாய் நீ...
நண்பன் என்று சொல்லிக்கொள்ள,
என் வாழ்வில் ஒருவன்
என் சுகங்களிலும், சோகங்களிலும்,
தவறாது பங்கேற்க .. நீ..
என்னை நண்பியாய் ஏற்றவவன் நீ
உனக்காக தாயாய்...
ஓர் சிநேகிதியாய்...
என்றும் நான் ...
எனக்கே எனக்கா?
என் நட்புலகின் அரசனாய்
என்றும் நீ, தோழன் ....
என்னை காக்க...
என்னை நேசிக்க...
எனக்கென நீ உனக்காக நான்
என்றும் நட்புடன்
Labels:
நிலாவின் கவிதைகள்
ஏக்கம்
ஒரு முறை சந்தித்தேன்
பலமுறை
சிந்திக்க வைத்தாய்....
இப்போது ...
பலமுறை சிந்திக்கிறேன்
ஒரு முறையாவது
சந்திப்போமா என்று
பலமுறை
சிந்திக்க வைத்தாய்....
இப்போது ...
பலமுறை சிந்திக்கிறேன்
ஒரு முறையாவது
சந்திப்போமா என்று
- நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Saturday, May 22, 2010
என் ஆசை
நீயும் என்னை கொஞ்சம் தேடவேண்டும் என்று
தொலைந்து போக தான் கொஞ்சம் ஆசை...
என்னால் தான் முடியவில்லையே
உன்னை காணாமல் ஒரு நிமிடத்தையும் கழித்துவிட....!
ஆனால் நீ மட்டும் தொலைந்து போகின்றாய்
மேகத்திட்குள்......!
-நிலவு
தொலைந்து போக தான் கொஞ்சம் ஆசை...
என்னால் தான் முடியவில்லையே
உன்னை காணாமல் ஒரு நிமிடத்தையும் கழித்துவிட....!
ஆனால் நீ மட்டும் தொலைந்து போகின்றாய்
மேகத்திட்குள்......!
-நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
நீ மட்டும்தான்!!!
என்னை அடிக்காமல்
அழ வைப்பது
நீ மட்டும்தான்!!!
என்னை காயப்படுத்தாமல்
வழிகள் தருவது
நீ மட்டும்தான்!!!
என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவது
நீ மட்டும்தான்!!!
என்னை சிதைக்காமல்
சித்திரவதை செய்யாதது
நீ மட்டும்தான்!!!
நான் வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும்
என்னோடு இருப்பது
நீ மட்டும்தான்!!!
-நிலவு
அழ வைப்பது
நீ மட்டும்தான்!!!
என்னை காயப்படுத்தாமல்
வழிகள் தருவது
நீ மட்டும்தான்!!!
என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவது
நீ மட்டும்தான்!!!
என்னை சிதைக்காமல்
சித்திரவதை செய்யாதது
நீ மட்டும்தான்!!!
நான் வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும்
என்னோடு இருப்பது
நீ மட்டும்தான்!!!
-நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
அன்பு
உன்னுடன் பேசும் போது
உலகத்தை மறைந்தேன்,
பேசிய பின் என்னை மறைந்தேன்,
உன்னை நினைத்து
எனக்கு
வேண்டியவர்களை யும் மறந்தேன்..
என்மேல்
அன்பு வைத்தவர்களையும்மறந்தேன்...
ஆனால் நீ மட்டும்
என்னை மறந்ததேன்.....?
இன்றுவரை புரியவில்லை
எது உண்மையான அன்பு என்று.
உலகத்தை மறைந்தேன்,
பேசிய பின் என்னை மறைந்தேன்,
உன்னை நினைத்து
எனக்கு
வேண்டியவர்களை யும் மறந்தேன்..
என்மேல்
அன்பு வைத்தவர்களையும்மறந்தேன்...
ஆனால் நீ மட்டும்
என்னை மறந்ததேன்.....?
இன்றுவரை புரியவில்லை
எது உண்மையான அன்பு என்று.
-நிலவு
Labels:
நிலாவின் கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)