Thursday, May 27, 2010

வானத்தில் நிலவாக

வானத்தில் நிலவாக இருந்து
நட்சத்திரங்களின் தொல்லை தாங்காமல்
பூமியில் வந்தாள்...

பூமியில் பெண்ணாக பிறந்து
மனிதர்களின் தொல்லை
தாங்க முடியவில்லையோ பெண்ணே...!!! 


- நிலவு

உன்னை விட்டு

உன்னை விட்டு 
என் உயிர் விலகுமா?

கண்ணை விட்டு 
கண் இமை  விலகுமா?

வானில் பல கோடி நட்சத்திரம்   
மின்னினாலும்
ஒரு நிலவுக்கு ஈடு இல்லை
 
உலகில் பல கோடி மனிதர்கள் இருந்தாலும்
உனக்கு நிகரில்லை 



- நிலவு

கடைசியாக ஒரு கவிதை

கடைசியாக ஒரு கவிதை
சொன்னாய்...

என்றுமே என்னை விட்டுப்
 
பிரிய மாட்டாய்என்று

உன்னையா?? 
அல்லது 
உன் நினைவுகளையா..??

- நிலவு

சிறையில்!

கம்பிகளில்லா சிறை
அங்கே நான் கைதியாக

கால் ஒடிந்த பறவையாய்
தனிமை எனும் சிறையில்!

உன் நினைவுகளுடன்

- நிலவு

கலங்கும் மனது

கலங்கமில்லா நிலவே!
எல்லோருக்கும் சந்தோஷத்தை கொடுத்தாய்

ஆனால்.....

உனக்குள் ஒரு கலங்கும் மனதும்
மௌன அழுகையையும்
யார் அறிவார்?

பலகோடி மக்களுக்கு
ஆறுதல் சொல்ல நீ!
உனக்கு ஆறுதலாக யாரோ?

- நிலவு

என் கண்களில் கண்ணீர்

அன்று நீ அழுதததால் உன்னை

“சிரிக்க வைத்தேன்”

கண்ணீரை துடைத்து விட்டேன்...!

இன்று நீ சிரித்து என்னை

"அழவைகின்றாய்"

என் கண்களில் கண்ணீர்....!



- நிலவு

நீயில்லை அருகில்

அன்புக்காய் ஏங்குகிறேன்
அரவணைத்திட
நீயில்லை அருகில்

பட்ட காயங்களின் வேதனையில்
தவிக்கிறேன் - தடவிட
நீயில்லை அருகில்

தூக்கத்தை தொலைத்து
இரவுகளில் விழித்திருக்கிறேன்
ஏனென்று கேட்க
நீயில்லை அருகில்

சந்தோசத்தை சொல்லி
சந்தோசிக்க விரும்புகிறேன்
நீயில்லை அருகில்

கன்னத்தில் வழியும்
கண்ணீர் கோடுகளே- இப்போது
சொந்தம் எனக்கு
யாருக்கும் தெரியாமல்
துடைத்துக் கொள்கிறேன்

என் மௌன அழுகை
உன் இதயத்தை பிழியும்
நான் அறிவேன்

இப்படியே வழிகளை வாழ்வாக்கி
வாழ்கிறது இந்த ஜீவிதம்

அன்னையே!
உன் அருகிருக்க  துடிக்கிறேன்
முடியவில்லையே?

- நிலவு

ரசித்தேன் உன் பொய்களையும்

 நீ சொல்வது
பொய் என்று தெரிந்தும்
உன்மேல் கோபமில்லை

உன் பொய்களையும் ரசித்தேன்
என் சன்தோஷத்திட்காய்த் தான்
பொய் சொல்கிறாய் என்று

- நிலவு

திறவுகோல்

 பூட்டிய என் மனக்கதவை
திறந்து வைத்தவன் நீ!

அன்பே!

இன்று என் மனத்தை
தவிக்கவிட்டு
உன் மனக்கதவை
பூட்டிக் கொண்டதேன்? 

- நிலவு

இணைப்பு


தினமும் உன் பெயரையும்
என் பெயரையும்
எழுதி இணைத்துப் பார்ப்பேன்

நிஜத்தில் ஒன்று சேர
முடியாமல் போனாலும்...

நிழலில் நம் பெயர்களாவது
ஒன்று சேரட்டும்  என்று


- நிலவு

எனது முதல் கவிதை...

ஆடைகள் இருந்தும்
ஆடம்பரத்தில் மூழ்கி
அரை குறை ஆடையில்
பணக்காரன்!

அரை முழ துணிக்காக- தன்
மானத்தை மறைக்க
ஏங்கிக்கொண்டிருக்கிறது
குடிசையில்....

"ஏழை மானங்கள்"

 

- நிலவு

எனக்கென நீ உனக்காக நான்

எனக்கென ஒருவன்.....
எனக்கே எனக்கா?

என் நட்புலகின் அரசனாய்
என்றும் நீ தோழன் ....

என்னை காக்க...
என்னை நேசிக்க ...

நண்பனே!

எனக்கும் உனக்கும் என்ன உறவு ?
மலரை காக்கும் முள்ளின் உறவா?

உன் மனம் புரியாமல் நான் இல்லை,
என் மனம் புரியாமல் நீ இல்லை

நட்பில் பரிசு நீ அல்லவா

சொந்தங்கள் எல்லாம் சோகங்கலாகிவிட...

என் உறவின் , இனிய பந்தமாய் நீ...

நண்பன் என்று சொல்லிக்கொள்ள,
என் வாழ்வில் ஒருவன்

என் சுகங்களிலும், சோகங்களிலும்,
தவறாது பங்கேற்க .. நீ..

என்னை நண்பியாய் ஏற்றவவன் நீ
உனக்காக தாயாய்...
ஓர் சிநேகிதியாய்...
 என்றும் நான் ...

எனக்கே எனக்கா?

என் நட்புலகின் அரசனாய்
என்றும் நீ, தோழன் ....

என்னை காக்க...
என்னை நேசிக்க...

எனக்கென நீ உனக்காக நான்

என்றும் நட்புடன்


- நிலவு

நினைவுப் பரிசு

 உன் கண்ணீர் என் கண்களில்;
என் புன்னகை உன் உதடுகளில் ;

போய் வா அன்பே!

இடம் மாறிப் போகின்றோம்
இதயங்களை
மாற்றிக்கொள்ளாமல்

நினைவுப் பரிசு எதற்கு?
உன் நினைவே பரிசு எனக்கு! 


  -நிலவு

ஏக்கம்

ஒரு முறை சந்தித்தேன்
பலமுறை
சிந்திக்க வைத்தாய்....

இப்போது ...

பலமுறை சிந்திக்கிறேன்
ஒரு முறையாவது
சந்திப்போமா என்று


- நிலவு

Saturday, May 22, 2010

என் ஆசை

நீயும் என்னை கொஞ்சம் தேடவேண்டும் என்று
தொலைந்து போக தான் கொஞ்சம் ஆசை...

என்னால் தான் முடியவில்லையே
உன்னை காணாமல் ஒரு நிமிடத்தையும் கழித்துவிட....!

ஆனால் நீ மட்டும் தொலைந்து போகின்றாய்

மேகத்திட்குள்......!

    -நிலவு

நீ மட்டும்தான்!!!

என்னை அடிக்காமல்
அழ வைப்பது
நீ மட்டும்தான்!!!

என்னை காயப்படுத்தாமல்
வழிகள் தருவது
நீ மட்டும்தான்!!!

என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவது
நீ மட்டும்தான்!!!

என்னை சிதைக்காமல்
சித்திரவதை செய்யாதது
நீ மட்டும்தான்!!!

நான் வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும்
என்னோடு இருப்பது
நீ மட்டும்தான்!!!
  
  -நிலவு

அன்பு

உன்னுடன் பேசும் போது
உலகத்தை மறைந்தேன்,
பேசிய பின் என்னை மறைந்தேன்,


உன்னை நினைத்து
எனக்கு
வேண்டியவர்களை யும் மறந்தேன்..
என்மேல்
அன்பு வைத்தவர்களையும்மறந்தேன்...


ஆனால் நீ மட்டும்
என்னை மறந்ததேன்.....?
இன்றுவரை புரியவில்லை

எது உண்மையான அன்பு என்று.


    -நிலவு