உனக்கு கவிதைகள் பிடிக்காது
என்றும் தெரியும்
உன் இதயத்தில் ஈரம் இல்லை என்றும்
எனக்கு தெரியும்
இருந்தும்...
என்றாவது ஒரு நாள்
என் கவிதைகளை
படிக்க நேர்ந்தால் ...
என் கவிதைகளும்
உன்னை எந்த அளவு நேசித்தது
என்று உனக்கு புரியும்
பின்பாவது ஒரு சொட்டு
கண்ணீரின் ஈரம்
போதும் என் கல்லறை
ரோஜாவிற்கு
- நிலவு
.
No comments:
Post a Comment