Sunday, August 22, 2010

சிறகிழந்து போனேன் தோழி

சகியே!- என் சகியே
தனியே நான் நீயெங்கே?

 
கரம் கோர்த்து நின்றவளே!- உன்
கரும்பான பேச்செங்கே?
எந்தன் நெஞ்சை பஞ்சனையாக்கி
தஞ்சம் கொண்ட மூச்செங்கே?

 
கன்னியில்லையே- என்
கவிதை சொல்லவே
தண்ணியில்லையே- கண்ணில்
விம்மி விம்மியே

 
வானம் பார்த்து
வானவில் பார்த்து
வான் நிலவை கேட்டு விட்டேன்
வாசல் வந்த தென்றல் காற்றை
வழி மறித்தும் கேட்டு விட்டேன்

 
கனவில் பூக்கும் கடுகுப்பூவே!
கண்ணே நீ போனதெங்கே?
தணலில் நானும் தூங்குகின்றேன்
தண்ணியாக வா இங்கே!


  -ஜாவிட் ரயிஸ்

.

No comments:

Post a Comment