உன்னை மறந்து நீயும்
என்னை மறந்து நானும்
பேசிக்கொண்டு இருக்கையில்...
நம் நட்பிற்குள் உள்ள
ஒரு சிறு இடைவெளியை
நம்மை அறியாமல் நிரப்பிக்கொண்டு இருக்கையில்
திடீர் என்றொரு மின்னல் கீற்று.....
மீண்டும் ஒரு இடைவெளி
மீண்டும் மௌனம்...........
இந்த இடைவெளிக்கும் மௌனதிட்கும்
பெயர் தான் என்ன ?
விடை தெரியாமல் நாம்.....!
- நிலவு
No comments:
Post a Comment