Thursday, May 27, 2010

எனக்கென நீ உனக்காக நான்

எனக்கென ஒருவன்.....
எனக்கே எனக்கா?

என் நட்புலகின் அரசனாய்
என்றும் நீ தோழன் ....

என்னை காக்க...
என்னை நேசிக்க ...

நண்பனே!

எனக்கும் உனக்கும் என்ன உறவு ?
மலரை காக்கும் முள்ளின் உறவா?

உன் மனம் புரியாமல் நான் இல்லை,
என் மனம் புரியாமல் நீ இல்லை

நட்பில் பரிசு நீ அல்லவா

சொந்தங்கள் எல்லாம் சோகங்கலாகிவிட...

என் உறவின் , இனிய பந்தமாய் நீ...

நண்பன் என்று சொல்லிக்கொள்ள,
என் வாழ்வில் ஒருவன்

என் சுகங்களிலும், சோகங்களிலும்,
தவறாது பங்கேற்க .. நீ..

என்னை நண்பியாய் ஏற்றவவன் நீ
உனக்காக தாயாய்...
ஓர் சிநேகிதியாய்...
 என்றும் நான் ...

எனக்கே எனக்கா?

என் நட்புலகின் அரசனாய்
என்றும் நீ, தோழன் ....

என்னை காக்க...
என்னை நேசிக்க...

எனக்கென நீ உனக்காக நான்

என்றும் நட்புடன்


- நிலவு

No comments:

Post a Comment