Saturday, September 4, 2010

நீ அறிவாயா?













உறவுகள் இல்லை

என்று ஏங்கி தவித்தாய்

உறவாக நான் உனக்கும்

உயிராக நீ எனக்கும்.....

என்று.....

*****
உனக்கு நான் ஆறுதலாக

எனக்கு நீ ஆறுதலாக

******


இன்று உறவுகளோடு நீ.....!

******


நான் மட்டும் தனிமயரையில்

உன் நினைவுகளோடும்

கண்களில் கண்ணீரோடும்

******
பாவாம் நீ...

என் கன்னத்தில் வழியும் கண்ணீருக்கு

கூட அர்த்தம் புரியாமல்...

ஆனந்த கண்ணீரா ,வேதனை கண்ணீரா என்று...!



- நிலவு

Wednesday, September 1, 2010

உன் குரல்.









அத்துனை மலர்களின்
நறுமணங்களையும்
ஒன்றாய் பூசி விடும்
தென்றல் காற்றாய்
உன் குரல்.....


என்ன வசியம்
வைத்துள்ளாய்
வார்த்தைகளில்
அனைத்தும்மறந்து
உன் குரல் கேட்க
பித்து பிடித்தாற்ப்போல்
மனம்..




உன் குர‌ல் கேட்காத‌
அழ‌கான‌ அதிகாலை
கூட‌ இன்று
அல‌ங்கோல‌மாய்....

முடிய‌வில்லை
உனை அழைக்க‌முய‌ன்றாலும்
முடியா எட்டாதூர‌த்தில்
என்னை ம‌ற‌ந்துஎன்ன
செய்துக்கொண்டிருப்பாய்

நீ....ம்ம் என்று ஒரு
வார்த்தை மொழிந்துவிடு
இந்த‌ நாள் இனிய‌நாள்
என‌க்கு...





சிநேகிதி