அன்புக்காய் ஏங்குகிறேன்
அரவணைத்திட
நீயில்லை அருகில்
பட்ட காயங்களின் வேதனையில்
தவிக்கிறேன் - தடவிட
நீயில்லை அருகில்
தூக்கத்தை தொலைத்து
இரவுகளில் விழித்திருக்கிறேன்
ஏனென்று கேட்க
நீயில்லை அருகில்
சந்தோசத்தை சொல்லி
சந்தோசிக்க விரும்புகிறேன்
நீயில்லை அருகில்
கன்னத்தில் வழியும்
கண்ணீர் கோடுகளே- இப்போது
சொந்தம் எனக்கு
யாருக்கும் தெரியாமல்
துடைத்துக் கொள்கிறேன்
என் மௌன அழுகை
உன் இதயத்தை பிழியும்
நான் அறிவேன்
இப்படியே வழிகளை வாழ்வாக்கி
வாழ்கிறது இந்த ஜீவிதம்
அன்னையே!
உன் அருகிருக்க துடிக்கிறேன்
முடியவில்லையே?
அரவணைத்திட
நீயில்லை அருகில்
பட்ட காயங்களின் வேதனையில்
தவிக்கிறேன் - தடவிட
நீயில்லை அருகில்
தூக்கத்தை தொலைத்து
இரவுகளில் விழித்திருக்கிறேன்
ஏனென்று கேட்க
நீயில்லை அருகில்
சந்தோசத்தை சொல்லி
சந்தோசிக்க விரும்புகிறேன்
நீயில்லை அருகில்
கன்னத்தில் வழியும்
கண்ணீர் கோடுகளே- இப்போது
சொந்தம் எனக்கு
யாருக்கும் தெரியாமல்
துடைத்துக் கொள்கிறேன்
என் மௌன அழுகை
உன் இதயத்தை பிழியும்
நான் அறிவேன்
இப்படியே வழிகளை வாழ்வாக்கி
வாழ்கிறது இந்த ஜீவிதம்
அன்னையே!
உன் அருகிருக்க துடிக்கிறேன்
முடியவில்லையே?
- நிலவு
No comments:
Post a Comment