Thursday, May 27, 2010

நீயில்லை அருகில்

அன்புக்காய் ஏங்குகிறேன்
அரவணைத்திட
நீயில்லை அருகில்

பட்ட காயங்களின் வேதனையில்
தவிக்கிறேன் - தடவிட
நீயில்லை அருகில்

தூக்கத்தை தொலைத்து
இரவுகளில் விழித்திருக்கிறேன்
ஏனென்று கேட்க
நீயில்லை அருகில்

சந்தோசத்தை சொல்லி
சந்தோசிக்க விரும்புகிறேன்
நீயில்லை அருகில்

கன்னத்தில் வழியும்
கண்ணீர் கோடுகளே- இப்போது
சொந்தம் எனக்கு
யாருக்கும் தெரியாமல்
துடைத்துக் கொள்கிறேன்

என் மௌன அழுகை
உன் இதயத்தை பிழியும்
நான் அறிவேன்

இப்படியே வழிகளை வாழ்வாக்கி
வாழ்கிறது இந்த ஜீவிதம்

அன்னையே!
உன் அருகிருக்க  துடிக்கிறேன்
முடியவில்லையே?

- நிலவு

No comments:

Post a Comment