Showing posts with label நிலாவின் கவிதைகள். Show all posts
Showing posts with label நிலாவின் கவிதைகள். Show all posts

Tuesday, May 3, 2011






தண்ணீரை தேடி ஒரு பாலைவனம் எங்கும் ...

காணல் நீரை கண்டு பாதையை தெலைத்த பயணமாய்......!



பாசத்தை தேடி வெகுதுரம்

பயணித்தும் வெறும்





கானல்கள் மட்டுமே

என் கண்களை ஏமாற்றி ..





வெறும் ஏமாற்றங்கள் மட்டுமே

என்னை பின் தொடர்கின்றது.....!


-நிலவு



Saturday, April 30, 2011

உன் மனசாட்சியை தொட்டு






தோழனே....! என்னை பிடிக்கும்

என்று தான் சொல்லிவிட்டாய்.....

 என்னை மட்டும் தான் பிடிக்கும் என்று ....
எப்போது சொல்லபோகிறாய் ?


உன் மனசாட்சியை தொட்டு சொல்லிவிடு
என் மனதை தொடுவதற்காக சொல்லி விடாதே .....!





- நிலவு

Tuesday, April 5, 2011

நம் பிரிவு



கொஞ்சம் கொஞ்சமாக உன்னை பிரிகின்றேன்....
நீ நிரந்தரமாக என்னை பிரிவதற்குள்......!

கொஞ்சம் கொஞ்சமாக என்னை மறக்க வைக்கின்றேன் ....!
நான் ... நிரந்தரமாக மறைவதற்குள்...!


நான் உன் பிரிவை தாங்க வேண்டும்.....!
நீ என் மறைவை தாங்க வேண்டும்......!

-நிலவு











Wednesday, November 17, 2010

அன்புக்காக




நீ ....நினைப்பது 
 நம் அன்பை துண்டிக்க 

நான்.... நினைப்பது 
நம் அன்பை  தொடர.....

உன் அன்பு
பொய்யானதோ மெய்யானதோ...

பாவம் அறியாது  கபடமற்ற என் நெஞ்சம்....

உயிள்ளவரை ஏங்கிகொடிருக்கிறது   

உன் அன்பிற்காக...

.

அன்புடன்,,,,,


- நிலவு

Sunday, November 7, 2010

வழியும் என் கண்ணீரே





வழியும் என் கண்ணீரே......!
என் வழித்துணையாக வருவாயா...?
வேறு துணை வேண்டாம் எனக்கு


இந்த வலியிலும் ஒரு
ஆனந்தம் எனக்கு...


என்னுடன் நீயாவது  எனக்காக  நிரந்தரமாக வருவாயா?






- நிலவு

இடைவெளி








உன்னை மறந்து நீயும்
என்னை மறந்து நானும்
பேசிக்கொண்டு இருக்கையில்...

நம் நட்பிற்குள்   உள்ள 
ஒரு சிறு இடைவெளியை  

நம்மை அறியாமல் நிரப்பிக்கொண்டு இருக்கையில்

திடீர் என்றொரு மின்னல் கீற்று.....

மீண்டும் ஒரு இடைவெளி
மீண்டும் மௌனம்...........

இந்த இடைவெளிக்கும் மௌனதிட்கும்
பெயர் தான் என்ன ?

விடை தெரியாமல் நாம்.....!


- நிலவு

Wednesday, October 20, 2010

என் முதல் சுவாசம்









என் தாயின் கருவறையை  பிரிந்தனால்...
என் முதல் சுவாசமும் அழுகையில்....!


உன் இதயவரையை பிரிந்ததனால்
என் கடைசி சுவாசமும்  அதே அழுகையில்....!








- நிலவு

Saturday, September 4, 2010

நீ அறிவாயா?













உறவுகள் இல்லை

என்று ஏங்கி தவித்தாய்

உறவாக நான் உனக்கும்

உயிராக நீ எனக்கும்.....

என்று.....

*****
உனக்கு நான் ஆறுதலாக

எனக்கு நீ ஆறுதலாக

******


இன்று உறவுகளோடு நீ.....!

******


நான் மட்டும் தனிமயரையில்

உன் நினைவுகளோடும்

கண்களில் கண்ணீரோடும்

******
பாவாம் நீ...

என் கன்னத்தில் வழியும் கண்ணீருக்கு

கூட அர்த்தம் புரியாமல்...

ஆனந்த கண்ணீரா ,வேதனை கண்ணீரா என்று...!



- நிலவு

Tuesday, August 31, 2010

நட்பு பாதை








தடு மாறும் போது
தாங்கி பிடித்தாய்....

தடம் மாறும் போது
தட்டிக் கேட்டாய்....

*********
உனக்கு துணையாக நான்.....
எனக்குதுனையாக நீ......

நம் நட்பு பாதையில் தடைகள் இன்றி
தொடர்ந்தோம் மகிழ்ந்தோம்

*********
இன்று நீயே....

பாதியில் தடங்கல் மாறி
பாதைகளையும் மாற்றி

நீ எங்கோ நான் எங்கோ....

**********
நீ பிரிந்தாலும் உன் நட்பின் நினைவுகள்
என்றும் என்னுடன்.....!

*********
நட்புடன்...

- நிலவு

Wednesday, August 25, 2010

ஹலோ!

நீ என்னுடன் பேசாவிட்டாலும்
நான் உன்னுடன் பேசாவிட்டாலும்
உன் "ஹலோ"
என்ற குரலை கேட்க
தினம் உன் தொலைபேசி
என்னை சுழற்றுகிறேன்
உனக்கு தெரியுமா? 

- நிலவு 


.

பிரிவு

பாதியில் பிரிந்து சென்றாய்!
பாவை மனதை
பறித்து சென்றாய்!
போனது போய்விட்டாய்


ஏன் உன் நினைவுகளை மட்டும்
விட்டுச் சென்றாய்?
உன் நினைவுகளால்
உருகி... உருகி...
என் உயிரையும்
பிரித்து செல்லத் தானோ?   


- நிலவு 




/

Monday, August 23, 2010

உன் இதயத்திடம் கேள்!

யாரை நேசிக்கிறாய்
என்று
என்னிடம் கேட்காதே!

உன் இதயத்திடம் கேள் !

காரணம்...
என் இதயம் உன்னிடத்தில்


- நிலவு 


.

உன்னிடமே

நீ என்னிடம் இருந்து ஒரு படி
விலகி நின்றால்...
நான் இரு படி விலகி நிற்க
நினைக்கிறேன்!

முடியவில்லை...

உன்னிடமே
இன்னொரு படி அதிகமாக
நெருங்குகிறேன்
என்று உணர்கிறேன் 


- நிலவு 


.

Sunday, August 22, 2010

அன்புத் தோழன்

என் மனதின் காயங்கள்...
இன்பங்கள் ,துன்பங்கள் ...
தேவைகள், ஆசைகள்...
கனவுகள்...

எல்லாம் தெரிந்து
அறிந்து, புரிந்து
பகிர்ந்துகொள்ள
காயப்பட்ட மனதுக்கு ஆறுதலாக, மருந்தாக
நீ வந்தாய் எனக்கே எனக்காக
ஒரு அன்பு தோழனாய்

இன்று உன் மௌனத்தால்
என் மனதிற்கு மேலும் காயங்களை
கொடுக்காதே...!

தாங்கிக்கொள்ள சக்தியில்லை
என் இதயத்திற்கு..
புரிந்துகொள்.. ! 




- நிலவு 



.

இறந்துகொண்டு இருக்கிறேன்

 உன் கடும் வார்த்தைகளால்
என்னை கொள்வதை விட
மௌனமாகவே இருந்துவிடு!
உன் மௌனத்தையேனும் ரசிக்கிறேன்

உன் கடும் பார்வைகளால் பார்த்து
என்னை கொள்வதை விட
நீ பார்க்காமலே இருந்துவிடு!
நானாவது உன்னை பார்த்து ரசிக்கிறேன்

நீ உன் வார்த்தைகளாலும், பார்வைகளாலும்
என் இதயத்தை கொன்றுவிட்டாய்!

இன்று உன் மௌனத்தால்
நான் தினம் இறந்துகொண்டிருக்கிறேன்!



- நிலவு 



.

உன் பெயர் சொல்லும்

என் இதய துடிப்பை
உன்னால் உணரமுடியவில்லை
என்றாலும்

என் நாடித்துடிப்பை உணர்ந்து பார்
ஒவ்வொன்றும்
உன் பெயர் சொல்லும் 

- நிலவு 


.

உன் முடிவில் என் ஆரம்பம்...

அன்று நீ எனக்காய் ஆரம்பித்த வரிகளில்
ஏனோ வைத்தாய் முற்றுப்புள்ளி?

இன்றுவரை புரியவில்லை

நீ வைத்த புள்ளியில் இருந்து
ஆரம்பித்த வரிகளாய் முடிக்க முடியாமல்
தொடர்கிறேன்...
உனக்காய்....

முடிப்பது எப்படி என்று புரியவில்லை
- நிலவு 


.