என் மனம் சொல்கின்றது
நான் உனக்காக எழுதிய கவிதைகளை
உன்னை பிரிந்த பின் ஓர் பௌர்ணமி இரவில்....
மீண்டும் ஒரு முறை வாசித்தேன்....
உதடுகள் புன்னகைத்தது
என் கவிதைகளில் நீ என்
தோழனாயிருந்தாய்,
நீ தோழனாய் மட்டுமல்ல
நீ என் காதலனாயிருந்திருக்கிறாய்....என்று
மனது மட்டும்
அழுதுகொண்டே சொன்னது....!
என்னை விட என் கவிதைகள்
உன்னை காதலிதிருகின்றன....!
- நிலவு
No comments:
Post a Comment